Wednesday, January 24, 2018

அன்னைத் தமிழுக்கு அழகிய இருக்கை

            இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்மொழிக்கு இருக்கை அமையவிருக்கும் செய்தி, தமிழர்களை நெஞ்சம் நிமிர்த்த வைத்திருக்கிறது.
தமிழர்க்கு இது எத்தனை பெருமை வாய்ந்தது. 
உலக அரங்கில் தமிழுக்குக் கிடைக்கப்போகும் அங்கீகாரம் எப்படிப்பட்டது என்பதை  இந்த தமிழ் இருக்கை  எடுத்துக் கூறப்போகிறது.

தமிழ் இருக்கை என்றால் என்ன?
    உலகத்தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவரும் முதன்மையான பல்கலைக்கழகங்களில் உலகின் முன்னோடி பல்கலைக்கழகம் ஹார்வர்டு பல்கலைக்கழகம். இங்கு இல்லாத துறைகளே இல்லை;இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு எல்லை என்பதும் இல்லை.எனவே,உலக அளவில் தமிழுக்கான ஒரு ஆராய்ச்சித் துறையே "தமிழ் இருக்கை" ஆகும் 

தமிழுக்கு  இருக்கை (துறை) ஏன் ?

       தமிழ் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மொழிகளுள் ஒன்று. ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்குகிறது. அண்மையில் ஒரு செம்மொழியாகவும் இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லை. 
        பன்னாட்டு அளவில் ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களுள் அடங்கும். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உலக அங்கீகாரம் பெற்ற பிற இலக்கியங்களுக்கு நிகராகப் புதிய, வெவ்வேறு நோக்குகளிலிருந்து ஆராயப்படவேண்டியதும், அவற்றின் விளைவுகளைப் பிற  பண்பாட்டினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதும் முக்கியமானது.   
        உலக அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும், ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்த குறைபாடுகள் சீர்செய்யப்படலாம். இந்த அடிப்படையில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நிறுவப்படவுள்ள தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

    தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழே அரசு மொழியாகக் கோலோச்சுகிறது. உலகம் முழுவதும் பரவியும் புலம்பெயர்ந்தும் வாழும் 10 கோடிக்கும் அதிகமான தமிழர்களின் தாய்மொழியாகவும், 2,500 ஆண்டுகள் தொன்மையான இலக்கிய வளமும் கொண்டு விளங்குகிறது தமிழ். இப்படிப்பட்ட தமிழ்மொழிக்கு “ஹார்வர்டில் தமிழ் இருக்கையை அமைத்தால் தமிழுக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்”

தமிழ் இருக்கையை அமைப்பது எப்படி?

        உலக மக்களை ஈர்க்கும் வல்லமை கொண்ட தமிழுக்கு ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்க என்ன வழிமுறை உள்ளது என்ற கேள்வி எழலாம். தகுதிமிக்க ஒரு பேராசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகம் அவரது தலைமையின் கீழ் தமிழ் இருக்கையை அமைக்கும். தேர்ச்சியும் திறமும் கொண்ட ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தி உலக சமுதாயத்துக்குச் தமிழைக் கற்றுக்கொடுக்கும்.

      தமிழையும் அதன் இலக்கிய இலக்கணப் பரப்பையும் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தும். தமிழ் மொழியைப் பேசும் மக்களாகிய தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல், வரலாறு, தொல்லியல் ஆகிய தளங்களிலும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும். ஆய்வு முடிவுகள் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு அவை சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். ‘உலகுக்கே பொதுவான ஒரு தமிழ் இருக்கை’ மூலம்தான் இந்தப் பணிகளை உலகறிச்செய்ய முடியும்.


ஏன் ஹார்வார்டு பல்கலைக்கழகம்?

       ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 1636-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் முன்னோடி பல்கலைக்கழகம் ஹார்வர்டு. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலகத்தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகிறது. இங்கு இல்லாத துறைகளே இல்லை;இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு எல்லை என்பதும் இல்லை என்று கூறத்தக்க அளவில், ஆராய்ச்சிகளுக்குக் கிள்ளிக்கொடுக்காமல், மில்லியன்களில் டாலர்களை அள்ளிக்கொடுக்கிறது ஹார்வர்டு.
          இங்கே மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை, ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளியிடும்போது அவற்றை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்வது கடந்தகால, நிகழ்கால வரலாறாகும். 
            இந்தப் பல்கலையின் முன்னாள் மாணவர்கள், இங்கே பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஆகியோரில் 47 பேர், கடந்த நூறாண்டுகளில் உலகின் உயரிய நோபல் விருதைப் பெற்றிருக்கிறார்கள். ஹார்வர்டின் தனிச்சிறப்பாக அனைவரும் கூறுவது ‘வேற்றுமையில் ஒற்றுமை’.
       இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று இருப்பது மதிப்புக்குரிய ஒன்றாக இருப்பதுடன், தமிழாய்வின் தரத்தையும், வீச்செல்லையையும் உலக மட்டத்துக்கு உயர்த்துவதற்கு உதவும்.

இப்போதும் தமிழ் கற்பிக்கப்படுகிறதா?
ஆம்!
ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தெற்காசியவியல் பிரிவின்கீழ் இப்போதும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தொடக்கத் தமிழ், இடைநிலைத் தமிழ், உயர்நிலைத் தமிழ் என மூன்று நிலைகளில் தமிழ்ப் பாடநெறிகள் உள்ளன.ஜொனதன் ரிப்ளே என்பவர் சுமார் 20 மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்து வருகிறார். ஆனாலும், இங்கே தமிழுக்கெனத் தனியான ஒரு பேராசிரியரின் கீழ் இயங்கும் கல்விசார் இருக்கை கிடையாது. இதனால், ஹார்வார்டில் தமிழாய்வு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய இருக்கை உருவாக்கப்படும்போது, தெற்காசியவியல் பிரிவின்கீழ் தமிழுக்கெனத் தனியான பிரிவு ஒன்றை உருவாக்கவும், அதற்கெனப் பேராசிரியர் ஒருவரை நியமிக்கவும் முடியும். இதன்மூலம், ஹார்வார்டில் தமிழ்க் கல்வியையும், தமிழ் ஆய்வையும் புதிய மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும்.

இதன் விதை எப்போது உருவானது?

     அவாய்த் தீவில் வசித்துவரும் வைதேகி ஹெர்பர்ட் பதினெட்டுச் சங்க நூல்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர். இவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழாவொன்றில் வைதேகியும், அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவ நிபுணரான விஜய் ஜானகிராமனும் பேசிக்கொண்டபோது ஹாவார்டில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் எண்ணம் உருவானது. தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்கான அழைப்புக் கிடைத்தது. ஜானகிராமனும், அவரது நண்பரான திருஞானசம்பந்தமும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.இதில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாகத்தான் தமிழுக்கு ஒரு இருக்கையை நிறுவுவதற்கு ஹார்வார்டு பல்கலைக்கழகம் முன்வந்தது. இதற்காக 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறக்கொடையாகக் கொடுக்கப்படவேண்டும்.

            ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் தனித்தனியே 500,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மீதி 5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக இலாப நோக்கற்ற நிறுவனம் (Tamil Chair Inc)ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

        ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாந்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர்கள்:
மருத்துவர் விஜய் ஜானகிராமன்,
மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம்,
திருமதி வைதேகி ஹெர்பெர்ட்,
திரு பால் பாண்டியன்,
திரு அப்பாதுரை முத்துலிங்கம்,
முனைவர் சொர்ணம் சங்கர்,
திரு குமார் குமரப்பன்,
முனைவர் ஆறுமுகம்முருகன்
ஆகியோர் ஆவர்.
    வாழ்க  தமிழ்!

Sunday, July 23, 2017

ஆங்கில அகர வரிசையில் அழகான வரிகள்

மனிதர்கள் பல நிறங்களில் படைக்கப்பட்டாலும்,  அவர்களில் 
நல்ல எண்ணங்களை  படைத்தவர்களே அழகானவர்கள்.... 
நமது வாழ்கையின் அடிப்படை என்பது  நம் எண்ணங்களை
பொறுத்தே அமைகிறது.
நமது வாழ்கையின் நோக்கம் என்னவென்று நாம்
அறிந்து கொள்ளவேண்டும்.                                 
நமது எண்ணங்களை மேம்படுத்தினால் தான் 
வாழ்க்கை முன்னோக்கி செல்லும். 
நமது எண்ணங்கள் நல்லவிதமாக இருந்தால்  
தான் நமது செயல்களும் நல்லவையாக இருக்கும். 
நல்ல செயல்கள்
  
இதோ  ஆங்கில அகர வரிசையில்.....
                  A-Appreciation
மற்றவர்களின்நிறைகளைமனதாரப்
பாராட்டுங்கள்.
B - Behaviour
புன்முறுவல் காட்டவும் சிற்சில 
அன்புச்  சொற்களைச சொல்லவும்
கூட நேரம்  இல்லாதது போல் நடந்து
கொள்ளாதீர்கள்.
                      C - Compromise  
அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
மனம்  திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.
 
                       D - Depression  
மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லையே
என்று சோர்வடையாதீர்கள்.
                      E - Ego 
மற்றவர்களை விட உங்களை உயர்வாக
நினைத்துகொண்டு கர்வப்படாதீர்கள்.
                       F - Forgive 
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும்
உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை
மன்னிக்க வழி  இருக்கிறதா  என்று பாருங்கள்.
                   G - Genuineness  
எந்த விஷயத்தையும் நேர்மையாகக்
கையாளுங்கள்.
H - Honesty  
தவறு செய்தால் உடனே மன்னிப்பு
கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I - Inferiority Complex
எவரையும்  பார்த்து பிரமிக்காதீர்கள். 
நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற 
தாழ்வு  மனப்பான்மையை விடுங்கள்.
J - Jealousy  
பொறாமை வேண்டவே வேண்டாம்.
அது கொண்டவனையே கொல்லும்.
K - Kindness  
இனிய   இதமான  சொற்களை மட்டுமே
பயன்படுத்துங்கள்.அன்புடனும்
அரவணைபுடனும் நடந்து கொள்ளுங்கள்.
L - Loose Talks
 சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும்
பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
M - Misunderstanding  
மற்றவர்களைத் தவறாகப்  
புரிந்துகொள்ளாதீர்கள்
N - Neutral 
எப்போதும் எந்த விஷயத்தையும்,
முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம்.
பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை
தவறாதீர்கள்.
O - Over Expectation   
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு 
வைக்காதீர்கள்.தேவைக்கு
அதிகமாகஆசைப்படாதீர்கள்.
P - Patience
 சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்
Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப்

பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப்
பேசுவதுதான்.கூடுமானவரை பேசாமலே
இருந்து விடுங்கள்.
R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும்,
தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம்

பிடிக்காதீர்கள்.
T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும்,
அங்கே கேட்டதை இங்கேயும்
சொல்வதை விடுங்கள்.
U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை
உண்டு என்பதை மறவாதீர்கள்.
V - Voluntary 
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று
காத்திராமல் நீங்களே பேச்சை முதலில்
தொடங்குங்கள். பிரச்னை வரும்போது
எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும்
காது கொடுங்கள்.
W - Wound
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும்
காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
X - Xerox
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும்
என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே
 மற்றவர்களை நாம் நடத்துவோம்.
Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள்.

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்
போவதில்லை.
Z - Zero
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால்

பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.
வாழ்க்கையை அழகாகக்குவோம் வாருங்கள்

Sunday, April 10, 2016

காய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்


கத்தரிக்காய்:
என்ன இருக்கு: 
விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து 

 யாருக்கு நல்லது: 
 ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும். 

 யாருக்கு வேண்டாம்: 
 சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது. 

 பலன்கள்: 
 நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.

உருளைக்கிழங்கு:
என்ன இருக்கு: 
புரதம், இரும்புச் சத்து, சிறிதளவு வைட்டமின் மற்றும் மாவுச்சத்து. 

 யாருக்கு நல்லது : 
 வளரும் குழந்தைகளுக்கு நன்றாக வேக வைத்து உருளைக் கிழங்கைச் சாப்பிடக் கொடுக்கலாம். உருளைக் கிழங்கின் மேல் தோலை நீக்காமல் சமைத்துச் சாப்பிட்டால், வாய்வுத் தொல்லை ஏற்படாது 

 யாருக்கு வேண்டாம் : 
 வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் மற்றும் குண்டானவர்கள். (இது குண்டான மனிதர்களை மேலும் குண்டாக்கி விடும்)

 பலன்கள் : 
 ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் சக்தி உடையது உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.

கேரட்:
என்ன இருக்கு : 
 விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள். 

 யாருக்கு நல்லது : 
 அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு.

யாருக்கு வேண்டாம் : 
 குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது. 
 
பலன்கள் : 
 கண் பார்வைக்கு உகந்தது. உடல் பருமனாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.

பீன்ஸ்:
என்ன இருக்கு : 
 புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள். 

 யாருக்கு நல்லது : 
 ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. 

 யாருக்கு வேண்டாம் : 
குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும். 

 பலன்கள் : 
 பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பளபளப்புக்கு உதவும்.

பீட்ரூட்:
என்ன இருக்கு: 
 க்ளூகோஸ் 

 யாருக்கு நல்லது : 
 ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும். 

 யாருக்கு வேண்டாம் : 
 சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது. 

பலன்கள் :
 ரத்தத்தை வளப்படுத்தும். சுறுசுறுப்பை அளிக்கும். மேனி நிறம் பெறும்.

நூல்கோல்:
என்ன இருக்கு : 
சுண்ணாம்புச் சத்து 

யாருக்கு நல்லது :
 ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு,சர்க்கரை நோயாளிகளுக்கு. 

யாருக்கு வேண்டாம் : 
 உப்புச் சத்து அதிகம் உள்ளவர்களுக்கு.

 பலன்கள் : 
 ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும்.

முள்ளங்கி: (வெள்ளை)
என்ன இருக்கு : 
 நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து. 

 யாருக்கு நல்லது : 
 சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும். 

யாருக்கு வேண்டாம் : 
ஆஸ்துமா நோயாளிகளுக்கு. 

பலன்கள் : 
 அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.

முள்ளங்கி: (சிவப்பு)
என்ன இருக்கு : 
கந்தகம், கால்சியம், விட்டமின் சி. 

 யாருக்கு நல்லது : 
 ஹைபர் அசிடிட்டி உள்ளவர்களுக்கு.

 பலன்கள்: 
 கை, கால், மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும். சிறுநீரை வெளியேற்றும்.

காலிஃபிளவர்:
என்ன இருக்கு :
 பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ. 

யாருக்கு நல்லது :
 புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். 

பலன்கள் :
 மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.

முட்டைக்கோஸ்:
என்ன இருக்கு : 
 சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ. 

யாருக்கு நல்லது : 
சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது. 

யாருக்கு வேண்டாம் : 
பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

 பலன்கள் : 
 ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.

நார்த்தங்காய்:
என்ன இருக்கு : 
 சிட்ரஸ் ஆசிட் 

 யாருக்கு நல்லது :
 அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு. 

யாருக்கு வேண்டாம் : 
வயிற்றுப்புண் அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாது. 

 பலன்கள் : 
 வாயுத் தொல்லையை விலக்கி நெஞ்சுக் கரிப்பை நீக்கும். அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும்

தக்காளி:
என்ன இருக்கு: 
மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவை இருக்கின்றன. 

 யாருக்கு நல்லது: 
எல்லோருக்கும் ஏற்றது. வறண்ட சருமம்,மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு உகந்தது. 

 யாருக்கு வேண்டாம்: 
ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள். (சிறுநீரககல் உள்ளவர்கள் விதை நீக்கப்பட்ட தக்காளி மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்)

 பலன்கள்: 
நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது. தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு. மலச்சிக்கலை நீக்கவும், உடலில் கொழுப்பு சேராமலும் தடுக்கும் தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும்.

முருங்கைக்காய்:
என்ன இருக்கு: 
 கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி 

யாருக்கு நல்லது:
 குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும். 

யாருக்கு வேண்டாம்: 
முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும். 

பலன்கள்:
 நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.

அவரைக்காய்:
என்ன இருக்கு: 
 உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து. 

 யாருக்கு நல்லது: 
 நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு. 

 யாருக்கு வேண்டாம்: 
 யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது. 

 பலன்கள்: 
 உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.

அத்திக்காய்:
என்ன இருக்கு : 
 விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து 

 யாருக்கு நல்லது : 
 மூலநோய் உள்ளவர்களுக்கு. 

பலன்கள் :
 மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.

பீர்க்கங்காய்:
என்ன இருக்கு : 
 நீர்ச்சத்தும் தாது உப்புகளும் 

 யாருக்கு வேண்டாம் : 
 யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும். 

பலன்கள் : 
 உடலுக்கு குளிர்ச்சியைத் தரும.

கோவைக்காய்:
என்ன இருக்கு : 
 விட்டமின் ஏ 

 யாருக்கு நல்லது : 
 நீரிழிவு நோயாளிகளுக்கு 

பலன்கள் : 
 வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.

புடலங்காய்:
என்ன இருக்கு : 
 உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து. 

 யாருக்கு நல்லது : 
 மூலநோய் உள்ளவர்களுக்கு. 

 யாருக்கு வேண்டாம் : 
ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

பாகற்காய்:
என்ன இருக்கு: 
பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது 

யாருக்கு நல்லது: 
 சர்க்கரை நோயாளிகளுக்கு 

 யாருக்கு வேண்டாம்: 
 வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும். 

 பலன்கள்: 
 தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.

சுரைக்காய்:
என்ன இருக்கு: 
 நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். 

 யாருக்கு நல்லது: 
 எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம் 

யாருக்கு வேண்டாம்: 
 சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.

 பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும்.

புடலங்காய்:
இது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். பூசணிக்காய்: 

 என்ன இருக்கு: 
 புரதம், கொழுப்பு 

 யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது

 யாருக்கு நல்லது: 
குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது

 பலன்கள்: 
 நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.

சுண்டைக்காய்:
என்ன இருக்கு: 
 விட்டமின் சி 

 யாருக்கு நல்லது : 
 சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம் 

பலன்கள்: 
கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.

கொத்தவரைக்காய்:
என்ன இருக்கு : 
 நார்ச்சத்து 

 யாருக்கு நல்லது : 
 நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு. 

 யாருக்கு வேண்டாம்: 
சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும். இது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும். 

 பலன்கள்: 
ருசி மட்டுமே

வாழைக்காய்:
என்ன இருக்கு: 
கொழுப்புச் சத்து, விட்டமின் இ. 

 யாருக்கு நல்லது: 
வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும் 

 யாருக்கு வேண்டாம்: 
 வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது 

 பலன்கள்: 
 உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.

மாங்காய்:
என்ன இருக்கு: 
நார்ச்சத்து, விட்டமின் ஏ 

 யாருக்கு வேண்டாம்: 
 சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும். 

பலன்கள்: 
 மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.

வெள்ளரிக்காய்:
என்ன இருக்கு: 
 விட்டமின் ஏ, பொட்டாசியம் 

 யாருக்கு நல்லது: 
 சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும் 

 யாருக்கு வேண்டாம்: 
ஆஸ்துமா நோயாளிகளுக்கு 

பலன்கள்: 
 உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.

பலாக்காய்:
என்ன இருக்கு : 
சுண்ணாம்புச்சத்து 

யாருக்கு வேண்டாம் : 
 வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு 

 பலன்கள் :
 செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்.

பப்பாளிக்காய்:
என்ன இருக்கு : 
 விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம். 

யாருக்கு நல்லது : 
 மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் 

 யாருக்கு வேண்டாம் : 
கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

வெண்டைக்காய்:
இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் ‘சி’ , ‘பி’ உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

வாழைத்தண்டு:
இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும். இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும். வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.

தேங்காய்:
இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் ‘ஏ’, ‘பி’ வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும். தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.

பழங்கள் சாப்பிடும் முறை இங்கே கிளிக் செய்யவும்