Tuesday, March 22, 2016

பழங்கள் சாப்பிடும் முறை



எந்த ஒரு உணவும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும். அந்த வகையில் பழங்களை எப்பொழுது, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்:

பழங்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழலாம் என்பது சித்தர்கள் கண்ட உண்மை. நார்ச்சத்து , வைட்டமின் , தாதுபொருட்கள், இனிப்பு ஆகியவை பழங்களில் அடங்கியுள்ளன. பழங்களில் காணப்படும் பெரிய சிறப்புத் தன்மை என்னவென்றால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடலின் எடையை கூட்டாமல் இருக்கும்..பழங்களில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. கார்போ-ஹைட்ரேட் , சிறிது புரோட்டின் ஆகியவை காணப்பட்டாலும் , உடல் எடையை அதிகமாக்கி விடாது.ஒரு வகை பேரிக்காயில் மட்டுமே கொழுப்பு நிறைந்து காணப்படும் மற்ற பழங்களில் கொழுப்புச்சத்து அதிகம் கிடையாது. 

பழம் சாப்பிடும்போது திருப்தி ஏற்படும் வரையில் சாப்பிட வேண்டியது அவசியம். ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வயிறு நிறைய வில்லை எனில் இன்னொரு ஆப்பிள் சாப்பிடலாம். வயிறு நிரம்பினால் பழம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அடுத்த 90 நிமிடங்கள் வேறு ஒன்றும் சாப்பிட வேண்டாம்

பழங்களைச் சாப்பிடுவதென்றால், உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!

சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் ரொட்டி, அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட ரொட்டியினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.


பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடன் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.

ஏனென்றால், சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகளை செரிக்க கூடுதல் நேரமாகும்.

அதனால் தயவு செய்து பழங்களை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் சாப்பிடுங்கள்.!!

பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

 ""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .

உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!

 நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை எல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால், நடக்காமல் தடுக்கப்படும்.

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால் Dr. Herbert Shelton என்பவர் இந்த. வகையில் ஆராய்ச்சிகள் செய்து கூறியதன்படி எல்லாப் பழங்களும் நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையடைகின்றன.

சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் **ரகசியம்** கிடைத்து விடும்.

நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, புதிதான பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள் வேண்டாம்

 சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்

பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.

சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.

பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால் நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.

உங்கள் உடல் உறுப்புகளை சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் மூன்று நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். அந்த மூன்று நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.உடலிலிருந்து நச்சுக்கள் வெளியேறிவிடும்.

மூன்று வேளையும் சாதம் சாப்பிடுபவர்கள் ஒரு வேளை சாதத்திற்கு பதிலாக பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் தென்படத் துவங்கும். உடலில் இரத்தம் அதிகரிக்கும். வாழைப்பழம் , ஆப்பிள், திராட்சை , பப்பாளி ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம்.

காலை 6 மணி முதல் 9 மணி வரை சாத்துக்குடியில் செய்த பழச்சாற்றை சாப்பிடலாம்.9 மணி முதல் 12 மணி வரை ஆரஞ்சு, பப்பாளி , பேரிக்காய் போன்றவை சாப்பிடலாம். மாலை நேரங்களில் மாம்பழம்,மாதுளம் பழம், செர்ரி, திராட்சை,தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவு உணவில் சேர்த்தால் , இரத்தக் கொதிப்பு முதல் பலவகையான நோய்களை தடுக்கலாம்.

இதை படித்துவிட்டு பழங்களை மட்டும் சாப்பிட்டு வாழப்போகிறேன் என்று சவால் விடாதீர்கள். அரிசி உணவையே சாப்பிட்டு பழகியதாலோ என்னவோ பழங்களை மட்டும் சாப்பிட்டால் வயிறு நிறைவு ஏற்படாது. பசிப்பது போலவே எண்ணம் தோன்றும்.சிறிது நாளில் சரியாகிவிடும்.

பழங்களும் பயன்களும்:

கிவி பழம்; இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம். இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம். ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

வாழைப்பழம் :-  

ஒரு வாழைப்பழத்தில் 100 கலோரி அளவு சத்து உள்ளது. உணவு செரிமானத்திற்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது வாழைப்பழம். வாழைப்பழத்தில் அதிகமாக உள்ள பொட்டாசியம் நரம்புகளும், தசைகளும் இலகுவாக செயல்படுவதற்கு உதவுகிறது.

விளாம்பழம் :- 

மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, பெப்டிக் அல்சர் மற்றும் நுரையீரல் கோளாறுகளை நீக்குகிறது விளாம்பழம்.

மாம்பழம் :-

 கல்லீரலில் ஏற்படும் உபாதைகளுக்கு ஏற்றது. உடல் எடையைக் கூட்டும். உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்களான இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து ஆகியவை உருவாவதற்கு மாம்பழம் பயன் படுகிறது.

திராட்சை :- 

 உணவு செரிமானத்திற்கு உதவும் திராட்சை, காய்ச்சலின் போது ஏற்படும் பலவீனத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது

செர்ரீபழம் :- 

செர்ரீ பழத்தில் உள்ள தாதுப் பொருள் யூரிக் அமிலம் உருவாவதை தடுக்கிறது மேலும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

அன்னாசி :-

 மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் இவைகள் உடலைப் பாதிக்காமல் தடுக்கிறது அன்னாசி.

ஆப்பிள்; 

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே! ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!

ஸ்ட்ராபெர்ரி ; 

பாதுகாப்பு தரும் பழம். இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

ஆரஞ்சு; 

  இனிப்பான மருந்து. ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும். அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.

தர்பூசணி; 

மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான். 92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.

கொய்யா& பப்பாளி 

இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை. கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.

முறையாக சாப்பிட்டு வளமாக வாழ்வோமாக.

காய்கறிகளின் பயன்களும் பக்கவிளைவுகளும் இங்கே கிளிக் செய்யவும்

Saturday, July 18, 2015

மனித உடம்பின் 100 இரகசியங்கள் !

  1. மனிதனின் உடம்பில உள்ள நூறு இரகசியங்கள்.

1. குழந்தையாக இருக்கும் போது
 வெள்ளை /கறுப்பு நிறங்களை 
தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது.

2. மனித உடலின் தோலின் எடை
 27 கிலோ கிராம்...

3. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் 
உள்ளன...

4. இதயத்தை, சிறுநீரகத்தை,கல்லீரலை, 
முழங்காலை மாற்றலாம். ஆனால்
மூளையை மட்டும் மாற்றவே 
முடியாது. காரணம் ஞாபங்கள், 
நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற 
முடிந்தாலும், மாற்றப்பட்டவன் 
வேற்று மனிதன் தான் அவன்
 அந்நியன் தான்.

5. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க
இரண்டு வகையான ஈரம்
தேவைப்படுகிறது.கண் இமைகள் 
தான் நம் வைப்பர்கள். அவற்றின்
விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. 
அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும்  சுரப்பிகளிலிருந்து 
கண்ணீர் வினியோகம் ஆகிறது.

6. நமது உடலிலுள்ள செல்கள்
பிரிந்து இரண்டாகும் தன்மையுடையது.
ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி 
செல்கள் இறந்து புது செல்கள் 
பிறக்கின்றன.

7. தலைமுடி இரண்டு வருடத்திலிருந்து 
நான்கு  வருடம் வரை வளர்கி றது. 
அதன்பின் 3 மாதம் வளராமல்
இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம்
வளர்கிறது.

8. ஓரு அடி எடுத்து வைக்க  உடலெங்கும் 
54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.

9. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின்
இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.
ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் 
லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது.

10. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை 
அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 
6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது.

11. நம்முடைய உடல்தோலின்
பருமன் மிகக் குறைந்தபட்சம் 
½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், 
அதிகபட்சமாக பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், 
அடிப் பாதங்களிலும்  அமைந்திருக்கிறது.

12.மூளை அதிகமாக வேலை வாங்கும் 
மனித உறுப்பு கட்டை விரல்கள்.

13. மனித உடலில் மிகவும் கடினமான
 பாகம் தாடை எலும்பு.

14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம்
தண்ணீரைக் கொண்டதாகும்.

15. கல்லீரல் 500 விதமானஇயக்கங்களை
நிகழ்த்துகிறது.

16. நம் உடல் தசைகளின் எண்ணிக்கை 630.

17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம்  உள்ளது.

18. நம் தலைமுடி ஒரு லட்சத்திலிருந்து
இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை
ஒரு மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.

19. மண்டை ஓடு  மனிதனின் 80 ஆம் 
வயது வரை வளர்கிறது.

20. மனித முகங்களை மொத்தம்  520 
வகைகளுக்குள்  அடக்கி விடலாம்.

21. ஆரோக்கியமான மனிதன் ஏழு 
நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.

22. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்.

23. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான்
பயன்படுத்துகிறார்கள்.

24.. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.

25. நம்  நகம் தினமும்  0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.

26. நாள் ஒன்றுக்கு நாம் 23,040
தடவை சுவாசிக்கின்றோம்..

27. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி).ஆண் என்றும் பெண் என்றும் குழந்தைகள் பிறப்பது இந்தக் குரோமோசோம்களின் விளைவால் தான்

28. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 
தசைகள் வேலை செய்ய வேண்டும்.

29. நமது நுரையீரல் மூன்று  லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும்
கொண்டதாக  இருக்கிறது. இவைகளின் 
நீளம் 2400 கி.மீ. உள்ளது.

30. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.

31. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள்
 உள்ளன. ஆனால் அவன்குழந்தையாக
 இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற
எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.

32. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை 
கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக 
வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.

33. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் 
இவைகள்ஒரே அளவாக இருப்பதில்லை 
காரணம்  கருவில் சிசு வளரும் போது
அதன் உறுப்புகள் ஒரே சீராக 
வளர்வதில்லை.இந்த மிகச் சிறிய 
வித்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்இடது கால் செருப்பை விட 
வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட  இந்த சிறு வித்தியாசத்தால் தான்.

34. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் 
வரை செயல்படுகிறது.அவனது எலும்பு 
தொடர்ந்து 4 நாட்களை வரை 
செயல்படுகிறது. தோல் தொடர்ந்து  ஐந்து
நாட்கள் வரை பணி செய்கிறது. கண்
மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம்
பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம்
செயல்படுகிறது. அவனது சிறுநீரகம்
தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந்தாலும் அவனது 
உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் 
நிறுத்தப்படவில்லை.

35 நம் உடலில் எலும்புத்தசை,இதயத்தசை, 
மழமழப்பான தசை என மூன்று வகை தசைகள் உள்ளது.

36. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகளை
செய்யும்போது தண்டு வடத்திலுள்ள
குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு 
விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் 
எவ்வித விறைப்புத் தன்மையும் 
இல்லாமல் படுத்து உறங்குவதால்
நமது உடம்பின் உயரம் கூடுகிறது...

37. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் 
பிறகு அது மடிந்து விடும். புது
சிவப்பணுக்கள்  உருவாகும். இரத்தத்தில் 
வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 
120 நாட்கள்.

38. நம் உடலில் சுமார் 20 லட்சம்
வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன

39. நமது கைகளில் நடுவிரலில் நகம்
வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம்  மெதுவாக வளர்கிறது.

40. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, 
சுமார் 40 முறை.அந்தப் பக்கம்,
இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்...

41. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ..

42. நாம் படுத்திருக்கும் போது  ஒரு 
நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும்
 உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் 
மூச்சுக்காற்றும், நடக்கும் போது  ஒரு 
நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்
தேவைப்படுகிறது.

43. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் 
இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், 
உப்புக்கருவாடு, ஆல்கஹால்
போன்றவற்றால் பாதிப்படைகிறது.

44.பெண்களைவிட ஆண்களுக்கு மூளை
 மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 
4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் 
இருக்கிறது.

45. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.

46. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்.

47. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்...

48. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க
நம்கட்டை விரலிலுள்ள மூன்று தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த மூன்று தசைகள் கிடை யாது.

49. மூளையின் மடிப்புகளே அறிவுக்
கூர்மையை தீர்மானிக்கிறது.

50. மனித உடலில் இருக்கும் இரத்தம் 
முப்பது அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்..

51. நமது உடலின் நீளமான
எலும்பு தொடை எலும்பு தான்.

52. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் 
பேசும் வேகம் நிமிடத்திற்கு ஐநூறு
சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

53. மூளையில் ஏற்படும் வலியை நம்மால்
உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.

54. பெண்களைவிட ஆண்களுக்கு நாற்பது 
சதவீ தம் கூடுதலாக வியர்க்கிறது.

55. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 
வைட்டமின்கள்.

56. உடலில் ரத்தம்  பாயாத பகுதி கருவிழி மட்டுமே.

57. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்
பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்..

58. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர
அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன...

59. நம்முடைய தலை ஒரே எலும்பால்
உருவானது அல்ல, 22 எலும்புகளில்
உருவானதாகும்.

60. மனித உடலில் ஐம்பது  லட்சம் 
முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின்
முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி 
விரைவானது என் றும் அறியப்படுகிறது..

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் 
இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63.மனிதனின் மூளை பகலைவிட இரவில் அதிகமாக செயல்படுகிறது.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்
எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர்
வியர்வை வெளியிடுகிறான்.

65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு 
யோசனையின் தூரம் என்று சொல்கிறோம் 
இந்த தூரம் 150 மைல்களாகும்..

66. ஓர் ஆணின் இதயத்தைவிட
பெண்ணின்  இதயம் அதிகமாக துடிக்கிறது

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல்
நுனிவரை உள்ள நீளமும், மேவாய்
கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் முப்பது  கோடி உயிரணுக்கள்
வரை இருக்கும்..

69. உடலில் உண்டாகும் உஷ்ணம்
வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..

70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு 
மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக்
 கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்..

71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர்
ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால்
தான் மனிதனுக்கு  கோபம்  வருகிறது.

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 
ஆறு கிராம் ஆகும்.

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக
நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்
ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு 
ஆண்குணமும் ஏற்படும்...

74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்
தானே  மரணம் ஏற்படும்படி செய்ய
எவராலும் முடியாது.

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால்
நாயின் மூக்கில் 22 கோடி நுகரும் 
செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி
அதிகம். காவல் துறையில் வேலை..

76. நம் இதயத்தின் எடை 10  அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் 
பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ  அதே அளவு தான்
அவரவர் இதயம் இருக்கும்.

77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள 'ஆலவியோலி' 
என் னும் சிறிய காற்று அறைகளின்
எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..

78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது..

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன..

80. மனிதனுக்கு நான்கு வகையான பற்கள்
உண்டு..

81. நமது நாக்கில் சுவை உணரும் 
மொட்டுக்கள் 9000 உள்ளன..

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள்
உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு..

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை, மூளையின்
வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் 
செல்களால் உருவானது..

85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.

86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட் டைகளோடு
தான் பிறக்கிறாள்.இந்த முட்டைகளை 
ஒரு டீஸ் பூனில் 10 லட்சம்  நிரப்பலாம்.

87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு சமார் 5600 மில்லி லிட்டர் ரத்தம் 
உடம்பிலிருக்கும்.

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற் படுகிறது.

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை லப்டப் செய்கி றது
வருஷத்திற்கு நான்க கோடி தடவை..

90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20
சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..

92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900
பென்சில்களை உரு வாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு ஏழு பார் சோப்புகளை 
செய்ய லாம்..

94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 
இரண்டு அங்குல ஆணி ஒன்று 
செய்யலாம்..

95. மனித உடலில் அதிகமாக காணப்படும்
தாதுப்பொருள் கால்சியம்..

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர்
நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம் வழியே நிமிடத்திற்கு 70 தடவை
 செல்கிறது...

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன்
குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால்  உபரியாக காற்றை
உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்...

98. மனிதன் 21 வயது முடிவதோடு 
உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் 
நின்று விடுகிறது.இறுதிவரை தொடர்ந்து
வளர்வது காது மட்டும்தான்.நம்மால் 
கண்டுபிடிக்க  முடியாத அளவிற்கு    வளர்ச்சி.

99.நமது உடம்பு வெளியிடும்
வெப்பத்தைக்கொண்டு இரண்டு  லிட்டர்
தண்ணீரை அரைமணி நேரத்தில
கொதிக்கவைக்க முடியும். 

100.நமது பல்லின் `எனாமல்' தான்
உடம்பிலேயே கடினமான பொருளாகும்.

 ● ///////////////////▲\\\\\\\\\\\\\\\\\\●

Monday, March 30, 2015

அதிசய கணித சதுரங்கள்

அதிசய கணித சதுரம்: 1

கணிதவியலில்  எத்தனையோ
விந்தை கணக்குகள் உள்ளது. 
அவற்றில் சதுரக்கட்டத்தில் 
உள்ள எண் கணக்குகளும் ஒன்று. 
சதுரக்கட்டத்தில் உள்ள எண்களை 
வரிசையாக கூட்டினால் கூட்டுத்தொகை ஒரே மாதிரியாக இருக்கும். 
இதிலென்ன அதிசயம்
இருக்கப்போகிறது என்பீர்கள். 
நீங்கள் நினைப்பது முற்றிலும் சரி. 
ஆனால் இது சற்று வித்தியாசமானது. கீழே உள்ள கட்டத்தைப் பாருங்கள்.


16 41 18 2 33 35 30
45 1 38 42 3 7 39
29 23 14 346 26 6
10 28 37 25 13 22 40
44 24 4 19 36 27 21
11 43 47 8 12 49 5
20 15 17 48 32 9 34


நீங்கள் நினைத்தது போல் இடமிருந்து வலம், மேலிருந்து 
கீழ மற்றும் குறுக்கே என எந்த வரிசையில் கூட்டினாலும் கூட்டுத்தொகை 175 வரும். 
ஆனால் கீழே உள்ள அதே
கட்டத்தை பாருங்கள். 

இது ஒரு "ஸ்வஸ்திக்"குறியீடு
போல் தோன்றும்.இதன் மத்தியில் 
உள்ள சிவப்பு நிற கட்டத்தில் 
உள்ள எண்  (எண் 25) 
பொதுவானது. 
அதனுடன் ஒரே நிறத்தில் உள்ள மற்ற எண்களை கூட்டினால் கூட்டுத்தொகை 175 வரும்.


16 41 18 2 33 35 30
45 1 38 42 3 7 39
29 23 14 31 46 26 6
10 28 37 25 13 22 40
44 24 4 19 36 27 21
11 43 47 8 12 49 5
20 15 17 48 32 9 34

இப்போது 
இரு வேறு  வடிவங்களில் 
ஒரே வண்ணத்தில் உள்ள எண்களை கூட்டினாலும் 
கூட்டுத்தொகை  175 வரும் 

1641 18 2 33 35 30
45 1 38 42 3 7 39
29 23 14 31 46 26 6
10 28 37 25 13 22 40
44 24 4 19 36 27 21
11 43 47 8 12 49 5
20 15 17 48 32 9 34

இந்த கட்டத்தையும் பாருங்கள்
இதன் கூட்டுத்தொகையும் 175


16 41 18 2 33 35 30
45 1 38 42 3 7 39
29 23 14 31 46 26 6
10 28 37 25 13 22 40
44 24 4 19 36 27 21
11 43 47 8 12 49 5
20 15 17 48 32 9 34

இதுவே முழுமையான வண்ணமயமான 
கட்டமாகும்.

16 41 18 2 33 35 30
45 1 38 42 3 7 39
29 23 14 31 46 26 6
10 28 37 25 13 22 40
44 24 4 19 36 27 21
11 43 47 8 12 49 5
20 15 17 48 32 9 34

அதிசய கணித சதுரம் :2        

      இது சற்று சுவாரஸ்யமானது.
இதன் கூட்டுத்தொகை 264  

96 I I89 68
88 69 9 I I 6
6 I 86 I 8 99
I 9 98 66 8 I



96 I I 89 68
88 69 9 I I 6
6 I 86 I 8 99
I 9 98 66 8 I 

நான்கு கட்டங்களாக உள்ள இதன்
ஒவ்வொரு வண்ணக் கட்டங்களின்
கூட்டுத்தொகையும் 264

96 I I 89 68
88 69 9 I I 6
6 I 86 I 8 99
I 9 98 66 8 I

பல்வேறு வடிவங்களில இதன்
கூட்டுத்தொகையும் 264


96 I I 89 68
88 69 9 I I 6
6 I 86 I 8 99
I 9 98 66 8 I

கீழே உள்ள கட்டத்தைப்
பாருங்கள்.இதுவே சுவாரஸ்யமானதாகும்.ஏனெனில்
மேலே உள்ள கட்டத்தை தலைகீழாக திருப்பினால் 
பின்வருமாறு தோன்றும்.
மேலே உள்ள அனைத்தும் 
இதற்கும் பொருந்தும்.இதன் கூட்டுத்தொகையும்
அதே 264 தான்


I 8 99 86 6 I
66 8 I 98 I 9
9 I I 6 69 88
89 68 I I 96

அதிசய கணித சதுரம்: 3

      இந்திய கணித மேதை இராமானுஜம் அவர்களால் 
உருவாக்கப்பட்டது.
இவர் சுமார் 3000-ககும் மேற்பட்ட
 கணிதத் தேற்றங்களை உருவாக்கினார்.இவரின் 
தேற்றங்களே இப்போது பல்வேறு 
தொழில்நுற்பங்களுக்கு 
உயிர்நாடியாக விளங்குகிறது.

இவருடைய பிறந்த தினம் 22.12.1887
இதை வைத்தே இந்தக் கட்டத்தை
உருவாக்கினார்.
இதன் கூப்டுத்தொகை 139

22 12 18 87
88 17 9 25
10 24 89 16
19 86 23 11


22 12 18 87
88 17 9 25
10 24 89 16
19 86 23 11


22 12 18 87
88 17 9 25
10 24 89 16
19 86 23 11


22 12 18 87
88 17 9 25
10 24 89 16
19 86 23 11


22 12 18 87
88 17 9 25
10 24 89 16
19 86 23 11


22 12 18 87
88 17 9 25
10 24 89 16
19 86 23 11


22 12 18 87
88 17 9 25
10 24 89 16
19 86 23 11


22 12 18 87
88 17 9 25
10 24 89 16
19 86 23 11

அதிசய கணித சதுரம்: 4

இதுவும் கணித மேதை இராமானுஜம் பற்றியதே.இது அவருடைய வாழ்க்கை 
நிகழ்வுகளை வைத்து 
உருவாக்கப்பட்டது.
இது சாத்தியமா என்பதை நீங்களே
முடிவு செய்துகொள்ளுங்கள்.

●கணிதமேதை இராமானுஜம்
பிறந்த நாள் 22.12.1887
●தொடக்ககல்வி பயில துவங்கிய ஆண்டு 1892
●தொடக்ககல்வியை முதல் 
வகுப்பில் தேர்ச்சி  பெற்று
முடித்த ஆண்டு 1897
●உயர்கல்வி பயில துவங்கிய
ஆண்டு 1898
●12 வயதில் கணிதவியலாளர்
 லோனி எழுதிய
முக்கோணவியலை படித்து
முடித்த ஆண்டு 1900
●தன் மனைவி ஜானகி 
பிறந்தநாள் 21.03.1899

இந்நிகழ்வுகளின் எண்களின்
கூட்டுத்தொகை  =640

■22+12+18+87+18+92+18+97
+18+98+19+00+21+03+18+99=
640


வாருங்கள் படத்தைப் பார்ப்போம்