தேசப்பற்றுமிக்க பாடல்களை கேட்பதென்பது தற்போது அரிதாகி வருகிறது.அந்த வகையில் துப்பாக்கி படத்தில் வெளிவந்த "மெல்ல விடைகொடு விடைகொடு மனமே" -என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இராணுவத்திலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்து பின் பணிக்குத் திரும்பும் ஒரு இராணுவ வீரனின் மனதை பிரதிபலிப்பதாக அது அமைந்திருந்தது. தன் தாய் தந்தை, மனைவி, குழந்தை, உறவினர் மற்றும் நண்பர்களை விட்டுச் செல்லும் போது ஏற்படும் ஏக்கம் பாடலைக் கேட்கும்போது நெஞ்சை நெகிழ வைப்பதாக உள்ளது.தன் தாய் தன்னை இராணுவத்தில் இருக்கிறான் என்பதை பெருமையாக சொல்லும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் சொல்லப்பட்டுள்ளது. இப்பாடலை இசையோடு கேட்கும்போது நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் அவர்கள் அனுபவிக்கும் இந்த வலிகளை எல்லாம் கடந்து வந்தது தான் எனும் போது நம் மனதிலும் வலி ஏற்படத்தான் செய்கிறது.
படம் : துப்பாக்கி
பாடியவர்கள் : கார்த்திக்,சின்மயி இசை : ஹாரிஸ் ஜெயராஜ் வரிகள் : பா. விஜய்
பாடியவர்கள் : கார்த்திக்,சின்மயி இசை : ஹாரிஸ் ஜெயராஜ் வரிகள் : பா. விஜய்
மெல்ல விடை கொடு விடை கொடு மனமேஇந்த நினைவுகள் நினைவுகள் கனமேதாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்இங்கு உறவுகள் பிரிவுகள் வருதேசில அழகிய வலிகளும் தருதேபோகின்றோம்போகின்றோம்தூரம் தூரம்ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ எனை விட்டு செல்லும் உறவுகளேஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ உயிர் தொட்டு செல்லும் உணர்வுகளேபோய் வரவாநண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்காதல் தென்றல் கூட கடந்து போகும்இப்பயணத்தில்உன் நினைவுகள்நெஞ்சடைக்குமேகாடு மலை செல்ல துவங்கும் போதும்நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மோதும்கைக்குழந்தையைஅணைக்கவேமெய் துடிக்குமேஆயிரம்ஆயிரம்எண்ண அலைகள் அலைகள் அலைகள் நெஞ்சோடுஆயினும்ஞாபகம்உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள் மண்ணோடுபோய் வரவாஎங்கே மகன் என்று எவரும் கேட்கராணுவத்தில் என தாயும் சொல்லஅத்தருணம் போல்பொற்பதக்கங்கள்கை கிடைக்குமாநாட்டுக்கேன்றே தன்னை கொடுத்த வீரம்ஆடை மட்டும் வந்து வீடு சேரும்அப்பெருமை போல்இவ்வுலகிலே வேறு இருக்குமாதேசமேதேசமேஎன் உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்போரிலேதாயகம்என் உடலின் உடலின் உடலின் வரமாகும்போய் வரவாபோய் வரவா (மெல்ல விடை கொடு விடை கொடு )
No comments:
Post a Comment