Saturday, July 20, 2013

படித்ததில் பிடித்த பொன்மொழிகள் 10

1.உலகத்தை  மாற்றுவது என்பது உங்களை மாற்றுவதில் உள்ளது.
2.மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்.
3.உங்களின் குணநலன்தான் உங்களின் எதிர்காலத்தை  தீர்மானிக்கிறது.
4.உயர்ந்த எண்ணங்களால் உள்ளத்தை நிரப்பினால் தாழ்ந்த எண்ணங்கள் தானே விலகிவிடும்.
5.பிறரிடம் நீங்கள் கண்ட கசப்பான செயல்களை பிறர் உங்களிடம் காணவேண்டாம்.
6.உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள்.
7.பொதுநல காரியத்திற்கு குறுக்கே எந்த சுயநலமும் வேண்டாம்.
8.இருளை நொந்துகொள்வதற்கு பதிலாக ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிவைப்பது மேலானது.
9.எந்த வேலைக்காகவும் அதிக பரபரப்பு அடைய வேண்டிய  அவசியம் இல்லை.
10.தைரியம் எல்லாவற்றையும் வெற்றிகொள்கிறது.

No comments:

Post a Comment